குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
தேனி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்க கூட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் கொடுத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சண்முகசுந்தரம் கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் ,கலால் உதவி ஆணையர்முத்துச்செல்வி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உதவித்தொகை வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 280 பேர் அணுக்கள் அளித்தனர் ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறை கிளியின் செட்டி மலை குளம் சுற்றியுள்ள விவசாயிகள் இளங்கோ அய்யா காலை மகேந்திரன் உள்ளிட்டோர் வழங்கிய மனுவில் தங்கள் பகுதியில் விவசாய நிலங்களில் பலர் குடியிருந்து பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம் ,ரோடு வசதி இல்லை இதனால் மழைக்காலங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள் வேளாண் விளைப் பொருட்கள் உரங்கள் கொண்டு செல்ல சிரமம் நிலவுகிறது தார்சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் கலெக்டர் அலுவலகம் முன் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டத்திலுள்ள பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்ட நிலம் இல்லாதவர்களுக்கு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது மாவட்டம் நிர்வாகி கோபால் தலைமை வகித்தார்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக