நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் ஆதங்கம் !!
வேலூர்மாவட்டம்,குடியாத்தம் நகரம் 9 வார்டு திருஞானசம்பந்தர் தெரு. தோப்பு தெரு. பால கங்காதர் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மழைக்காலங்களில் தனி நபர் நீர்வழி பாதையில் வீடு கட்டி வசித்து வருவதால் கழிவு நீர் . மற்றும் மனித கழிவுகள் சாலையில் செல்வதால் துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இது சம்பந்தமாக குடியாத்தம் நகராட்சிக்கு கடந்த 5 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தோம் நடவடிக்கை இல்லை இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் கே.வி.ஆர்.

கருத்துகள்
கருத்துரையிடுக