போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீர் செய்த பண்ருட்டி போக்குவரத்து காவல்துறையினர்!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி போக்குவரத்து காவல்துறையினர் பண்ருட்டி கும்பகோணம் சாலையில் மின்சார ஊழியர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியாக உயர் மின்னழுத்த கம்பிகளில் உரசிய படியாக சாலைகளில் வளர்ந்துள்ள மரக் கிளைகளை வெட்டி பராமரிப்பு பணியை மேற்கொண்டனர். சாலை ஓரங்களில் கிடந்த மரக்கிளைகள் அப்புறப்படுத்த காலதாமதம் ஆகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தெரிந்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பண்ருட்டி போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் முரளி மற்றும் தேவநாதன் ஆகியோர் உடனடியாக மரக்கிளைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தினை சீர் செய்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக