வடலூரில் சர்வதேச மையம் வேண்டாம் என வலியுறுத்தல்!!
கடலூர் மாவட்டம்,குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸிடம், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வடலூர் சத்திய ஞான சபை உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கக் கூடாது என்றும், வேறு இடத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக