காட்டுமன்னார்கோவில்: கூடுதல் வகுப்பறை திறந்து வைப்பு!!
கடலூர்மாவட்டம்,மாவட்ட கனிம வள நிதியின் கீழ், காட்டுமன்னார்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய். 38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாணவர்களுக்கான கூடுதல் இரண்டு வகுப்பறைகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர். சிந்தனைச் செல்லன் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக