கடலூர்: ஓடையில் அழுகிய நிலையில் ஆண் உடல் கண்டெடுப்பு!!
கடலூர் மாவட்டம், கிள்ளை அருகே பொன்னந்திட்டு ஓடையில் நேற்று (செப்.03) சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் அழுகிய நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இது தொடர்பாக கிள்ளை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக