தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின்!!
விழுப்புரம்மாவட்டம்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழுப்புரம் இ.எஸ் கார்டன் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர். ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் IAS, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர். இரா.இலட்சுமணன் MLA அவர்கள் முன்னிலையில் நேற்று(22.09.2025) குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ப.சரவணன்IPS அவர்கள், தீயணைப்பு துறை விழுப்புரம் மண்டல துணை இயக்குநர். க.தென்னரசு, திருச்சி மத்திய மண்டல துணை இயக்குநர் க.முரளி, மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் பாஸ்கரன்(விழுப்புரம்), அனுசியா(கள்ளக்குறிச்சி) உட்பட பலர் உடன் இருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்
கருத்துரையிடுக