தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருத பெற்ற வாலாஜாபேட்டை காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்து!!
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழ்நாடு அரசு, மாவட்ட / மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையங்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான பரி வழங்கி வருகிறது.
அதன்படி சிறந்த காவல் நிலையமாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதை, காவல் நிலையம் சார்பாக ஆற்காடு கிராமிய காவல் ஆய்வாளர். சாலமோன் ராஜா அவர்கள், கடந்த சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களிடம் இருந்து பெற்றார்.
மேற்கண்ட விருது பெற்ற ஆற்காடு கிராமிய வட்ட ஆய்வாளர். சாலமோன் ராஜா அவர்களை, இன்று ( மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால், இ.கா.ப அவர்கள் பாராட்டி, எப்போதும் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில், இராணிப்பேட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர். இமயவர்மன்அவர்கள் உடனிருந்தார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக