அதிமுகவினர் சார்பில் முருங்கை ஏரி சீரமைப்பு எம்எல்ஏ ரவி ஆய்வு!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் முருங்கை கிராமம் உள்ளது.இங்கு உள்ள ஏரியின் மூலம் 600 ஏக்கர் நிலம் பயனடைந்து வருகிறது. மேலும் நீர்வரத்து கால்வாயும் அடைப்பில் இருப்பதால் நீர்வரத்து இல்லாமல் வறண்டு உள்ளது. இந்த நிலையில்அதிமுக நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர். சசிகுமார் முயற்சியின் பெயரில் சட்டமன்ற உறுப்பினர். சு.ரவி அதிமுகவினரின் முயற்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது எனது சட்டமன்றத் தொகுதியில் உள்ளடங்கியது முருங்கை கிராமம் இங்கு உள்ள ஏரி சீமைக்கபடாமல் இருப்பதுடன் நீர்வரத்து வரகூடிய விருதாச்சலம் ஆற்றின் கால்வாய்களும் தூர்த்து போய் உள்ளது ஆகவே கால்வாய் பாதை ஏரிசீரமைக்கும் பணிகள் அதிமுகவின் ஸ்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் பொன்னையாற்றிலிருந்து நாகவேடு சிறுனமல்லி வழியாக பாசன வசதி செய்து தரும்படியும் இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு கூறினார். அப்போது நெமிலி ஒன்றிய செயலாளர் ஏ ஜி. விஜயன் துணைச் செயலாளர். புருஷோத்தமன் உட்பட பலரும் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக