மேல்களத்தூர் சாலை சீரமைக்காவிட்டால் நெமிலி பிடிஓ அலுவலகம் முன்பு போராட்டம் திட்ட இயக்குனருக்கு எம்எல்ஏ கடிதம்!



ராணிப்பேட்டை மாவட்டம் மேல்களத்தூர் காலனி சாலை விரைவில் சீரமைக்காவிட்டால் நெமிலி பிடிஒ அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும் என மாவட்டதிட்ட  இயக்குனருக்கு அரக்கோணம் எம் எல் ஏ சு.ரவி கடிதம் அனுப்பி உள்ளார் அந்த கடிதத்தில் எம் எல் ஏ சு.ரவி கூறியதாவது ராணிப்பேட்டை மாவட்ட திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை அவர்களுக்கு வணக்கம் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி மேல் களத்தூர் ஊராட்சி மேல் களத்தூர் காலனி டு பாலாபுரம் காலனி செல்லும் 700 மீட்டர் தார் சாலை குண்டும்  குழியுமாக மக்கள் செல்ல பயனற்றதாக உள்ளது இந்த சாலை முழுக்க முழுக்க ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்துகிற சாலை இச்சாலையை சீரமைக்க பலமுறை கடிதம் கொடுத்தும் 

சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நேரடியாகவும் கைபேசி மூலமும் தெரிவித்தும் இதுவரை அச்சாலையை சீரமைக்க வில்லை இதுவரை ஊராட்சி பொறியாளரும் சாலையை பார்வையிடவில்லை எனவே மதிப்பிற்குரிய திட்ட இயக்குனர் தாங்கள் நேரடியாக இச்சாலையை பார்வையிட்டு இன்றிலிருந்து இரண்டு மாதத்திற்குள் உடனடியாக சீரமைத்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இல்லையென்றால் மக்களை திரட்டி நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்பதை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!