விழுப்புரம்: புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா முன்னாள் அமைச்சர். க. பொன்முடி பங்கேற்பு!!
விழுப்புரம்மாவட்டம்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில், நடைபெறும் முப்பெரும் விழாவில் காணொளி காட்சி வாயிலாக புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பள்ளி கட்டடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சியில் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், மணக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர். ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர். க.பொன்முடி நேற்று (20.09.2025) கலந்துகொண்டனர். உடன் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர். முருகேசன், மாவட்ட கல்வி அலுவலர். சேகர், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய குழு உறுப்பினர். கு.ஓம்.சிவ சக்திவேல், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர். பி.வி.ஆர்.விஸ்வநாதன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்
கருத்துரையிடுக