பெங்களூரில் இருந்து விற்பனைக்காக குட்கா வாங்கிவந்தவர் மற்றும் மளிகை கடை உரிமையாளர் கைது!!
விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட V.சாலை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர். மணிகண்டன், சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில் அப்பகுதிகளில் சென்று சோதனை மேற்கொண்டதில்
V. சாலை கீழ்க்கண்ட எதிரியின் மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் பெங்களூரில் இருந்து விற்பனைக்காக சுரேஷ் என்பவரிடம் இருந்து வாங்கியதாக தெரிய வந்ததை அடுத்து .சீனுவாசன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் எதிரிகளும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்
கருத்துரையிடுக