தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது நல்லாசிரியர் விருது!!
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறையால் நடத்தப்பட்ட ஆசிரியர் தின விழாவில்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர். முனைவர். ராஜா .ஆ அவர்களுக்கு இவ்வாண்டுக்கான தமிழ்நாடு அரசின் டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது நல்லாசிரியர் விருது , தமிழ்நாடு துணை முதல்வர் மாண்புமிகு.உதயநிதி ஸ்டாலின் அவர்களால் விருது சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது. விருது பெற்ற முனைவர் ராஜா ஆ அவர்களுக்கும், மேலும் கடலூர்மாவட்டத்தில்நல்லாசிரியர் விருது பெற்ற 11 ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,
விருத்தாச்சலம்,கடலூர் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் , ஆசிரியர்கள், பள்ளி வளர்ச்சி குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு ,அரசியல் பிரமுகர்கள் ,ஆசிரியர்கள் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக