அரக்கோணம் பழனி பேட்டையில் நடைபெற்ற பேரறிஞர். அண்ணா பிறந்த நாள் விழா!500 பேருக்கு நலதிட்ட உதவிகள்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117 -வது பிறந்தநாளில் பேரறிஞர் அண்ணா சிலை முத்தமிழறிஞர் கலைஞர், தந்தை பெரியார் திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு 500 -க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்டங்கள் வழங்கபட்டது. இதற்கு நகர கழக அவைத் தலைவரும் நகரமன்ற உறுப்பின்கள் குழுதலைவருமான துரை சீனிவாசன் தலைமைதாங்கிஏற்படுசெய்தார்.கூட்டத்தில் அனைவரும் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
நகரத் துணைச் செயலாளர்.ப.நந்தாதேவி முன்னிலை வகித்தார். கவுன்சிலரும், மாவட்ட கலை இலக்கிய பேரவை தலைவர். சி. என்.அன்பு வரவேற்றார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள். ரேவதி, கன்னியப்பன், ராஜலட்சுமி கே.எம்பி.பாபு மற்றும் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர். பழக்கடை தமின் பழனி,கன்னியப்பன்சந்திரசேகரன்,ஜெயக்குமார், இன்பன்,இ.ரா.சண்முகம், அப்துல் காதர்,திருமால், ஞானசேகரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக