தூத்துக்குடி: சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் 50 மாணவர்களுக்கான வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம் ரூபாய் .1.50 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள கட்டுமான பணி!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவின் இன்றைய தூத்துக்குடிமாவட்ட ஆய்வுப் பயணத்தின் போது திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் 50 மாணவர்களுக்கான வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம் கட்டுதல் குறித்த அரசு உறுதிமொழியின் அடிப்படையில் ரூபாய் 1.50 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படும் செங்கல் தரமின்றி இருப்பதை கண்டறிந்தனர். அவற்றை உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்தி அதன் தரத்தை கண்டறிய உத்தரவிட்டதோடு, அவை தரமற்று இருப்பின் உடனடியாக கட்டுமானத்தை நிறுத்தி தரமான கட்டுமான பொருட்களை கொண்டு கட்டிடம் கட்டப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர். வேல்முருகன் எம். எல். ஏ.




கருத்துகள்
கருத்துரையிடுக