வேலூர் மாநகராட்சி, சேன்பாக்கம் 31வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்! நீர்வளத்துறை அமைச்சர். துரைமுருகன் பங்கேற்பு!!
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, வேலூர் மாநகராட்சி, மண்டலம் 4, சேன்பாக்கம், தனியார் திருமண மண்டபத்தில் (11.09.2025) நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை நீர்வளத்துறை அமைச்சர். துரைமுருகன் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு சொத்து வரி மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்ற ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது வேலூர் மாவட்ட ஆட்சியர். சுப்புலெட்சுமி IAS, கோட்டாட்சியர். செந்தில்குமார், மாநகராட்சி கமிஷனர். லட்சுமணன், வட்டாட்சியர். வடிவேலு, மாநகராட்சி மேயர். சுஜாதா ஆனந்தகுமார், துணை சுனில்குமார், மாநகராட்சி சுகாதார அலுவலர். பாலமுருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர். இந்த முகாமில் வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, வேளாண் துறை, மின்சாரத்துறை, மகளிர் உரிமைத் தொகை நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். பின்னர் தகுதியுடைய மனுதாரர்களுக்கு ஆவண ஆணைகளை வழங்கினர்.
வேலூர் செய்தியாளர் முபாரக் அலி.

கருத்துகள்
கருத்துரையிடுக