வாலாஜா: மாற்றுத்திறனாளி தீபாவிற்கு தன்னுடைய சொந்த செலவில் 3 சக்கர வாகனத்தை வழங்கிய அமைச்சர். ஆர். காந்தி!!
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், குடிமல்லூர் ஊராட்சிய சேர்ந்த மாற்றுத்திறனாளி தீபா என்பவர் ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்கனவே இருந்த வாகனம் பழுதடைந்த நிலையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும் இராணிப்பேட்டை மாவட்ட திமுக கழக செயலாளருமான ஆர்.காந்தி அவர்களிடம்
சட்டமன்ற அலுவலகத்திற்கு நேரில் வந்து கோரிக்கை மனு அளித்தார்.அதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிக்கு பொருத்தமான மூன்று சக்கர வாகனத்தை தன்னுடைய சொந்த செலவில் ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி மற்றும் இராணிப்பேட்டை விஸ்வாஸ் பள்ளி தலைவர். கமலாகாந்தி அவர்களும் இணைந்து வழங்கினார்கள்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக