காட்டுமன்னார்கோவில்: கஞ்சா விற்ற 2 பேர் கைது!!
கடலூர்மாவட்டம்,காட்டுமன்னார்கோவிலில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் துறையினர் ரகசியமாக கண்காணித்தனர். இதில், காட்டுமன்னார்கோவில் புது மேல வீதியை சேர்ந்த பரணிதரன் மற்றும் ஹரி பிரசாத் ஆகிய இருவர் மோட்டார் சைக்கிளில் பல்வேறு இடங்களுக்குச் சென்று கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக