மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்12 பழங்குடியின இருளர்களுக்கு பட்டா மற்றும் வீடு கட்டும் வசதிஎதிர்கட்சி துணை கொறடா சு.ரவி MLA!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம்,12 பழங்குடியின இருளர்களுக்கு பட்டா மற்றும் வீடு கட்டும் வசதி ஏற்படுத்தி தருமாறு மாவட்ட ஆட்சியருக்கு எதிர்கட்சி துணை கொறடா சு.ரவி MLA கடிதம் அனுப்பினார். அதில் கூறியிருப்பதாவது.
மதிப்பிற்குரிய ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வணக்கம் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி கீழ்ப்பாக்கம் ஊராட்சி கன்னியவேடு கிராமத்தில் அனா தின புறம்போக்கில் நீண்ட நாட்களாக ஓலை குடிசையிலே வசித்து வரும் 12 பழங்குடியின இருளர் குடும்பங்களுக்கு இதுவரை பட்டா வழங்காமல் இருந்து வருகிறது எனவே மேற்படி 12 பழங்குடியின இருளர் குடும்பங்களுக்கு உடனடியாக பட்டா வழங்கி
பி எம் ஜென்மான் திட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள் வழங்கி உதவிடுமாறு தங்களைஅன்புடன்கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறுஅரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும்தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை கொறடா வுமான .சு.ரவி எம்.எல்.ஏ குறிப்பிட்டுள்ளார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக