நெமிலி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா! எஸ். மணிவண்ணன் பங்கேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக சுற்று சூழல் அணி துணை செயலாளர் R.G.வினோத் காந்தி அவர்களின் மேற்பார்வையில், சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் இரா. பாஸ்கரன் வழக்கறிஞர், நெமிலி வடக்கு ஒன்றிய திமுக கழக செயலாளர். எஸ். மணிவண்ணன் தலைமையில் சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட நெமிலி வடக்கு ஒன்றியத்தில் உள்ள 28 பூத்துகளிலும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் அவைத் தலைவர். பொன்னுரங்கம், துணைச் செயலாளர்கள். வெங்கடேசன், சம்பத், சித்ரா மனோகரன், மாவட்ட பிரதிநிதி. சம்பத், மணிகண்டன், கிளைச் செயலாளர், கிளை பிரதிநிதி BLA2, BDA, BLC அவர்கள் அனைவரும் ஒன்று கூடி அவர்கள் தலைமையில் கூறிய உறுதிமொழி உடன் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து தமிழ்நாட்டின் மண், மொழி, மானம், காப்பதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டு மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பேரறிஞர் Anand அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் திமுக கழக நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்


கருத்துகள்
கருத்துரையிடுக