கன்னியாகுமரி: திருவனந்தபுரம் நான்கு வழி சாலை ரூபாய். 1041.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட வேல்முருகன் எம். எல். ஏ!!
கன்னியாகுமரி மாவட்டம்,தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவின் இன்றைய கன்னியாகுமரி மாவட்ட ஆய்வுப் பயணத்தின் போது அங்கு திருவனந்தபுரம் நான்கு வழிச் சாலையை அமைப்பது குறித்தான அரசு உறுதிமொழியின் அடிப்படையில் ரூபாய் 1041.30 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர். வேல்முருகன் எம். எல். ஏ அவர்கள் பார்வையிட்டு பணிகள் தரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ததோடு பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க அறிவுறுத்தினார்.




கருத்துகள்
கருத்துரையிடுக