10 வயது சிறுவனுக்கு மயக்க ஊசி செலுத்தி கடத்த முயற்சி!!
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் பத்து வயது சிறுவனை மயக்க ஊசி செலுத்தி கடத்த முயற்சி! தி.கலலுபட்டியைச் சேர்ந்த சிறுவன் பள்ளி முடித்து வீட்டுக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது மாஸ்க் அணிந்த மூன்று மர்ம நபர்கள் சிறுவனுக்கு மயக்க ஊசி செலுத்த முயன்றுள்ளனர். சிறுவன் தப்பிய நிலையில் கத்தியால் சிறுவனை தாக்க முயன்று சட்டையை கிழித்து கையில் காயம் ஏற்பட்டது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து காவல் துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக