கடலூர் -பண்ருட்டி NH சாலையில் விபத்தினை தடுக்கும் பொருட்டு காவல்துறை சார்பில் புதிய தடுப்புபாண்கள்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்கள் உத்தரவின் பேரில் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர். பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் உதவி ஆய்வாளர். செந்தில்குமார் ஆகியோர்கள் கடலூர் - பண்ருட்டி NH சாலையில் ஏற்படும் விபத்தினை தடுக்கும் பொருட்டு சாலைகளின் ஆபத்தான வளைவுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் புதியதாக நிரந்தர சாலை தடுப்பான்கள் அமைக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக