கடலூர் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பெட்டிஷன் மேளா! ஜெயக்குமார் IPS பங்கேற்பு!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில் கடலூர் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்களிடம் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.N. கோடீஸ்வரன், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் பெட்டிஷன் மேளாவில் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக