ராணிப்பேட்டை சிப்காட் தொழில் பேட்டையில் குரோமியம் கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர். சந்திரகலா IAS!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். J.U.சந்திரகலா IAS அவர்கள் ராணிப்பேட்டை சிப்காட் தொழில் பேட்டையில் மூடப்பட்ட தமிழ்நாடு குரோமேட்ஸ் கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் குரோமியம் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்து மாசு ஏற்படுதல் தடுக்க நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்கள். உடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய செயற்பொறியாளர். செல்வகுமார், சிப்காட் திட்ட அலுவலர். கலைச்செல்வி, உதவி பொறியாளர் ஆனந்தன், கௌதம், வட்டாட்சியர். ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள். பாஷா, ரவிச்சந்திரன் மற்றும் பலர் உள்ளனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக