பண்ருட்டி போக்குவரத்து காவல்துறை சார்பில் பணிக்கண் குப்பம் செயின்ட் பால் CBSE பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில், பண்ருட்டி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர். முரளி அவர்கள் பண்ருட்டி பணிக்கண்குப்பம் செயின்ட் பால் CBSE பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் 18 வயது நிறைவடைந்து ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்கக் கூடாது எனவும் பேருந்துகளின் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யக் கூடாது என அறிவுரை வழங்கியும், போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்து கூறினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக