தலைமை ஆசிரியருக்கு ஊர்பொதுமக்கள் நடத்திய பாராட்டு விழா!!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சுப்புலாபுரத்தில் நேற்று 08.08.25 ல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர். ஜெ. இராஜாராம் பாண்டியன் அவர்களுக்கு பள்ளியின் மேம்பாட்டிற்காகவும், வளர்ச்சிக்காகவும் செய்துள்ள சாதனைகளைப் பாராட்டி ஊர்ப் பொதுமக்கள் சார்பாக பாராட்டு விழா நடந்தது. அதில் ஆண்டிபட்டி வட்டார கல்வி அலுவலர். ஆரோக்கியராஜ் அவர்களும் ஊரில் பெரிய தனம் ஏ.ஆர். ஆர். ராமராஜ் (என்ற) சுரேஷ் அவர்களும், ஊர்பொதுமக்களும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும், பள்ளியின் ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக