குடியாத்தம் பகுதியில் போலீசார் அதிரடி நடவடிக்கை!!
வேலூர்மாவட்டம்,குடியாத்தத்தில் கடையின் முன் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்த கோரி கடந்த 28 7 2025 அன்று போக்குவரத்து காவல் நிலையத்தில் வணிகர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கடையின் முன் வைக்கப்பட்டுள்ள போர்டுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று போக்குவரத்துக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
ஆனால் இதை கண்டு கொள்ளாமல் வணிகர்கள் இருந்த நிலையில் இன்று அதிரடியாக நகர காவல் ஆய்வாளர். செல்வம் போக்குவரத்து காவல் ஆய்வாளர். முகேஷ் குமார் நகர அமைப்பு அலுவலர். சீனிவாசன் ஆகியோர் தலைமையில் போலீசார் அதிரடி நடவடிகளில் ஈடுபட்டு போர்டுகளை அப்புறப்படுத்தினர்கள்இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குடியாத்தம் செய்தியாளர் கே .வி. ஆர்.


கருத்துகள்
கருத்துரையிடுக