வெள்ளி வீதி அம்மையார் நினைவு கண் சிகிச்சை முகாம்: தாசில்தார் துவக்கி வைத்தார்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்கம் கட்டிடம் உள்ளது. இங்கு இச்சங்கத்தின் சார்பில் 275 வது கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது முகாமிற்கு முன்னாள் ஆளுநர் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். அருண்குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் தாசில்தார் வெங்கடேசன் கலந்து கொண்டு வெள்ளிவீதி அம்மையார் 23ம் ஆண்டு நினைவு கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்து கண் பரிசோதனை செய்து கொண்டார். முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இம்முகாம் பணிகளில் முன்னாள் தலைவர்கள். விஸ்வநாதன்,
ஆறுமுகம், வேலவன், ராமு, முனிரத்தினம், அப்சல் கான் உள்ளிட்டவர்களும் இதர சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர். மோகன்காந்தி மாநில துணை செயலாளர். ஆறுமுகம் நகர தலைவர். ரவிச்சந்திரன் பேச்சாளர். பாலகிருஷணன், அசோக் சரண்குமார், கஜேந்திரன உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். இறுதியில முன்னாள் தலைவர் ஐயப்பன் ரவி 500 பேருக்கான அன்னதானத்தை துவக்கி வைத்தார். முகாம் ஒருங்கிணைப்பாளர். குமார் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.




கருத்துகள்
கருத்துரையிடுக