வேலூரில், தெரு மின் விளக்கு, கழிவுநீர் கால்வாய் வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அதிமுக மாமன்ற உறுப்பினர் தரையில் உருண்டு அங்கப்பிரதேசன போராட்டம்!!!

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, வேலூர் மாநகராட்சி, மண்டலம் 4, 49வது வார்டு தொரப்பாடி பகுதியில் தெரு மின்விளக்கு வசதி, சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, சுத்தமான நிரந்தர குடிநீர் வசதிகள் ஆகிய அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும் அடிப்படை வசதிகளை செய்து தராததால் அப்பகுதி வார்டு கவுன்சிலர் மாமன்ற உறுப்பினர் எஸ்.லோகநாதன் 49 வது வார்டு பொதுமக்கள் சமூக ஆர்வலர்களுடன் மாமன்ற உறுப்பினர் தரையில் உருண்டு மக்களுக்காக சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி அமைத்து தரக்கோரி நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இது குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எஸ். லோகநாதன் என்பவர் அதிமுக கவுன்சிலர் என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி திமுக மேயர் அவரை கண்டுகொள்ளவில்லை என இப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். அப்பகுதியில் பள்ளிகளும் மருத்துவமனைகளும் வழிபாட்டு தலங்களும் உள்ளதால் பொதுமக்கள்  சாலையில் செல்லக்கூட   முடியவில்லை இதனால்  அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக  ஆர்வலர்கள் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்யராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!