அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் சார்பில் நடைபெற்ற போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர் பேரணி!!
கடலூர் மாவட்டம்,அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் சார்பில் நாட்டு நலப்பணி திட்டம் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்களும் பண்ருட்டி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களும் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் காவல்துறை அதிகாரிகள் நகர மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக