அரக்கோணம்:ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் கொண்டுவர வேண்டும் விசிக வலியுறுத்தி பேச்சு!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் அரக்கோணம் விசிக நகர ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி கவின் ஆணவ படுகொலை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர். அப்பள்ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள். கவுன்சிலர். நரேஷ், பாக்யராஜ் மற்றும் சந்துரு முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட செயலாளர். கவுதம் மற்றும் இளஞ்சிறுத்தைகள் பேரவை மாநில துணை பொது செயலாளர். வழக்கறிஞர். தமிழ் மாறன் சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் பேசியவர்கள் ஆணவ படுகொலை எதிரான சட்டம் கொண்டு வர வேண்டும் கவின் குடும்பத்தாருக்கு ரூபாய் இரண்டு கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் அவரது சகோதரருக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும் என வலியுறுத்தி பேசினார்கள். கூட்டத்தில் கோவி. பார்த்திபன், திருச்சி ஜேம்ஸ், அருண், குணா, ஜெகதீசன்,  வஜ்ரவேல், ஜெயராஜ், சாம்ராஜ் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!