கரூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்! முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களால், மக்களின் வீடுகளுக்கே அரசின் சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் துவக்கி வைக்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்களின் ஒருபகுதியாக, இன்று கரூர் தொகுதி, பஞ்சமாதேவி நவஜீவன் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்டு கரூர் மாவட்ட சொந்தங்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி பயன்பெற அன்புடன் வேண்டுகிறேன். என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர். தங்கவேல் இ.ஆ.ப, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக