பண்ருட்டி போக்குவரத்து காவல்துறை சார்பில் லாரி உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில் பண்ருட்டி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர். பரமேஸ்வரபத்மநாபன் அவர்கள், உதவி ஆய்வாளர்கள். முரளி மற்றும் செந்தில்குமார் ஆகியோர் பண்ருட்டி நகர லாரி அசோசியேஷன் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு போக்குவரத்து சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும், மது அருந்தி வாகனம் ஓட்டக் கூடாது, அனுமதிக்கப்பட்ட எடை அளவை தவிர வாகனங்களில் அதிக சுமை ஏற்றக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக