ரயில்வே தொழிற்சங்க தலைவர் தலைமையில் காதணி விழா!!
ராணிப்பேட்டை மாவட்டம்,தென்னக ரயில்வே எஸ் ஆர் இ எஸ் மத்திய தொழிற்சங்க தலைவரும் அரக்கோணம் ரயில்நிலையத்தில் உள்ள பக்த ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் நிர்வாக அறங்காவலரும் தமிழ்நாடு ஜாயின் வெல்பர் டிரஸ்ட், இணை செயலாளருமான சி.கோவிந்தராஜ்- மற்றும் துணைவியார் தலைமை ஆசிரியர் கோ.புவனேஸ்வரி தம்பதியர்களின் மகன் கோ.வெங்கட்நிர்மல்-வெ.ரூபாஸ்ரீ ஆகியோரது குழந்தைகள் வெ.தர்ஷிக்இஷான்
வெ.வமிகா ஸ்ரீமயீ காதணி விழா காலங்காலமாய் தொடர்ந்து வரும் சம்பிரதாய முறைப்படி சிறப்புடன் திருவண்ணாமலையில் மதலாங்குளம், திருமதி மஹாலில்
கடந்த 10ந் தேதி நடைபெற்றது. அப்போது உறவினர்கள் ச.செல்வகணேசன்-செ.நிம்மி மற்றும் சுற்றத்தார் நண்பர்கள் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினர் இளைஞர்கள் ஆகாஷ் கோகுல் ஆகிய இருவர் இறுதியில் வந்திருந்த நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக