அரக்கோணம்: அம்மனூர் முனீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேகம்!!
ராணிப்பேட்டை மாவட் டம், அரக்கோணம் அடுத்த அம்மனூர் ஆண்டரசன் பேட்டையில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று 10ம் தேதி சிறப்பாக நடைபெற்றது . இதற் காக வெள்ளிக்கிழமை 8ந்தேதி பந்தகால் விழா நடந்து முடிந்தது. நேற்று ஞாயிற்றுக்திமமை 10ந் தேதி மூன்றாம் நாள் பூஜைக்காக காலை 10.00 மணிக்கு கலசங்கள் புறப்பட்டு கோபுர விமானங்களுக்கும் & விக்கிரகங்களுக்கும் கும்பாபிஷேகம், செய்யப்பட்டு ஆரத்தி, காணபிக்கபட்டது. தொடர்ந்து பிரசாதங்களும் அன்னதானமும் வழங்கபட்டது விழாவில் வணிகர் சங்க பேரவை மாநில செயல்தலைவர் கே.எம். தேவராஜ் பாத்திர கடை சரவணன், வணிகள் சங்க மாநில நிர்வாகி எத்திராஜி நாயுடு, காரம் இனிப்பகம் கடை சரவணன் அதிமுக நகர நிர்வாகிகள் பாண்டுரங்கன் பேன்சி தாமு மார்கெட் வெற்றி உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை அரக்கோணம் . வி எம். பாஸ்கர் வி எம்.முனிவேலன் மற்றும் வி எம்.சீனிவாசன் சகோதரர் குடும்பத்தினர், காஞ்சிபுரம் கிஷன் குடும்பத்தினர். செய்திருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக