ராணிப்பேட்டையில் விசிக சார்பில் நடைபெற்ற தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்பு சட்டம் ஏற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!!
தமிழகத்தில் தொடர்ச்சியாக சாதிய வன்மத்தோடு நடைபெறும் ஆணவக்கொலையை தடுக்க தமிழக அரசு உடனடியாக ஆணவக்கொலை தடுப்பு சட்டம் இயற்ற கோரி விடுதலை சிறுத்தை கட்சியின் ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம்,விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர தொல்.திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழகத்தில் தொடர்ச்சியாக சாதிய வன்முத்தோடு நடைபெறும் ஆணவக்கொலையை தடுக்க தமிழக அரசு உடனடியாக ஆவணகொலை தடுப்பு தனிசட்டம் ஏற்றகோரி விடுதலை சிறுத்தை கட்சி ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்டம் ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலாளரும் ராணிப்பேட்டை நகரமன்ற துணைத் தலைவருமான சீ.ம.ரமேஷ் கர்ணா மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் பிரபு (எ) பிரபுதாஸ் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.






கருத்துகள்
கருத்துரையிடுக