கரூரில் நடைபெற்ற கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி! முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், கரூர் கலைஞர் அறிவாலயத்தில் இருந்து கரூர் பேருந்து நிலையம் வரை, மாபெரும் அமைதி பேரணி, நவீன தமிழ்நாட்டை வடிவமைத்த நற்றமிழ் நாயகர், டாக்டர். கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடைபெற்றது.. பின்னர் முத்தமிழ் அறிஞரின் திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
இந்த நெகிழ்வான நிகழ்வில், மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக