வடலூர்: இரத்த அழுத்த பரிசோதனை கருவி வழங்குதல்!!
கடலூர் மாவட்டம்,குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர். எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பிறந்தநாளை முன்னிட்டு, வடலூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கல்வி குழு தலைவர் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார், மக்களைத் தேடி மருத்துவ மருந்து விநியோகஸ்தர்களுக்கு இரத்த அழுத்த பரிசோதனை கருவி, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மற்றும் மக்களைத்தேடி மருத்துவ பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்வு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக