கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக மற்றும் பாமகவினர்.
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்றுணர்ந்து, கரூர் கிழக்கு ஒன்றியம் சேனைப்பாடி கிளை பகுதியைச் சேர்ந்த அதிமுக / பாமக நிர்வாகிகள், மணி, மகேஷ், சுரேஷ், குணா, நாகராஜ், சம்பத், யவராஜ், கோகுல், பாலு, லட்சுமி, மணிமேகலை மற்றும் சந்தியா ஆகியோர், அந்த கட்சிகளில் இருந்து விலகி முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக கழக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் இன்று தங்களை திமுக கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக