கோவை: அன்னூரில் நடைபெற்ற திமுக பொறியாளர் அணி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்!!
கோவை மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின்அவர்களின் வழிகாட்டுதலின் படி, கழக பொறியாளர் அணி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், இன்று கோவை மாவட்டம், அன்னூர் சாமுத்திரிகா திருமண மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி, திமுக கழக துணைப் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா அவர்கள் சிறப்புரையாற்ற, பொறியாளர் அணி மாநிலச் செயலாளர். எஸ்.கே.பி கருணா தலைமையில் மாநிலத் தலைவர் துரை.கி.சரவணன் முன்னிலையில், மாநில துணைச் செயலாளர். எஸ்.ஏ.நந்தகுமார், திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர், திருப்பூர் மாநகராட்சி மேயர் . ந.தினேஷ்குமார், பொறியாளர். அணி மாநில இணை மற்றும் துணைச் செயலாளர்கள், மாண்புமிகு வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர்.
அ.வெற்றியழகன், முன்னாள் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர். கு.சண்முகசுந்தரம், வே.உமாகாந்த், இரா.நரேந்திரன்,சி.பிரதீப், இரா.ப.பரமேசுகுமார், ஆர்.வி.எல்.இரவிச்சந்திரன், கலை கார்த்திகேயன், வெற்றி ஞானசேகரன், பி.அன்பழகன், எம்.பி.ராஜவர்மன், நா.பாபு உள்பட மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொறியாளர்கள் அணி நிர்வாகிகள் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.




கருத்துகள்
கருத்துரையிடுக