புவனகிரி: அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தாய்பால் வார விழா!!
கடலூர் மாவட்டம், புவனகிரி அரசு தாலுக்கா மருத்துவமனையில் நேற்று உலக தாய்ப்பால் வார விழா தலைமை மருத்துவர். முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது.
தாய்ப்பாலின் மகத்துவத்தையும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் குழந்தைகள் நல மருத்துவர் ஸ்ரீபாலாஜி, எடுத்துரைத்தார். தாய்மார்களுக்கு எற்படும் நன்மைகள் பற்றி மரு. சுஜித்ரா விளக்கினார். இதில் செவிலியர்கள், தாய்மார்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக