கரூரில் நடைபெற்ற தாயுமானவர் திட்டம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு!!


கரூர் மாவட்டம்,தாயுமானவர் திட்டம்மக்களின் இல்லத்திற்கே மருத்துவம், மக்களின் இல்லத்திற்கே கல்வி, மக்களின் இல்லத்திற்கே அரசு சேவைகள் என மக்கள் நலத்திட்டங்களை மக்களின் இருப்பிடத்திலேய வாழ்ந்திடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின்  திராவிட மாடல் நல்லாட்சியின் மகுடத்தில் மற்றொரு வைரமாக, வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று, ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் தாயுமானவர் திட்டத்தை இன்று சென்னையில் துவக்கி வைத்தார்  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள்.. அதன் தொடர்ச்சியாக, இன்று கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மக்கள் பாதை, வஞ்சியம்மன் கோவில் தெருவில், தாயுமானவர் திட்டத்தை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார்.


இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர்.மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!