அரக்கோணத்தில் லஞ்சம் கொடாதோர் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிபேட்டை மாவட்ட லஞ்சம் கொடாதோர் இயக்கம் மாதந்திர கூட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை பழனிபார்வதி ஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக , மாநில போது செயலாளர் விஜயரங்கம்,, , மாநில துணை பொது செயளாலர் ரகமதுல்லா, , மாநில அமைப்பு செயலாளர் ஜெயகோபி, , மாநில கொள்கை பரப்பு செயலாளர் மனோகரன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
கூட்டத்திற்கு ராணிபேட்டை மாவட்டத் தலைவர் ,ராஜேந்திரன் தலைமை தாங்கினார். , மாவட்ட செயலாளர் மகாராஜன், , மாவட்ட பொருளாளர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார்கள் கூட்டத்தில் உறுப்பினர்கள் மோசூர் ராஜேஷ், எம்பி.சோமசுந்தரம் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர் உறுப்பினர்கள் சேர்க்கை உட்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. . கூட்டத்தின் முடிவில் மாவட்ட தலைவர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக