பண்ருட்டியில் கனரக போக்குவரத்திற்கு சாலையில் இடையூறாக இருந்த சிமெண்ட் கட்டைகளை போக்குவரத்து போலீசாரால் அகற்றம்!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பரமேஸ்வர பத்மநாபன், உதவி ஆய்வாளர் முரளி ஆகியோர் பண்ருட்டி- கும்பகோணம் இணைப்பு சாலை (Link Road) ரவுண்டானா பகுதியில் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் திசை திருப்ப முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட சிமெண்ட் கட்டையால் விபத்துகளும் அவ்வபோது ஏற்படுவதாலும். இதனை கவனத்தில் கொண்டு போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சிமெண்ட் கான்கிரீட் கட்டைகள் JCB இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு விபத்துகள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக