ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!!
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், ஆயிலம் மதுரா கவரப்பாளையம் இடுகாட்டில் ( இறந்தவர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்காக) கிராமத்தில் கடந்த 2020-2021 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
சுமார் 5.25 லட்சம் ரூபாயில் பொது கழிப்பிடம் கட்டப்பட்டு, 5 ஆண்டுகள் ஆகியும், இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. இதற்கு ஒப்பந்ததாராக A.V. நந்தகுமார் திமுக ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளர், அதிகாரத்தை பயன்படுத்தி ஊர் பொதுமக்களுக்கு கழிப்பறை கட்ட கோரிக்கை வைத்தோம். அவர் ஊரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள இடுகாட்டில் கழிப்பறை அமைத்து, மக்கள் வரிப்பணத்தைவீணடித்துள்ளார்கள்.ஆகையால், மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்.


கருத்துகள்
கருத்துரையிடுக