திருப்பாதிரிப்புலியூர்: பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்!!
கடலூர் மாவட்டம்,தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆகஸ்ட் 26 நேற்று கடலூரில் விரிவாக்கத்துடன் தொடங்கப்பட்டது. திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீ பாடலீஸ்வரர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில், கடலூர் எம்.எல்.ஏ ஐயப்பன், மாநகராட்சி மேயர். சுந்தரி ராஜா, மாநகராட்சி ஆணையர். அனு ஐ.ஏ.எஸ் ஆகியோர் கலந்துகொண்டு திட்டத்தை துவக்கி வைத்தனர். மேலும், அவர்கள் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தி திட்டத்தின் சிறப்பை உணர்ந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக