முதியவர் மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் உன்னதமான தாயுமானவர் திட்டம் துவக்க விழா!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திரு வலம் பகுதியில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை சார்பாக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் உன்னதமான தாயுமானவர் திட்டத்தினை சென்னையில் தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் அதைத் தொடர்ந்து காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவலத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர். சுப்புலட்சுமி.,IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உன்னதமான தாயுமானவர் திட்டத்தினை கொடி அசைத்து தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றிய கழக பொதுச் செயலாளரும், நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சருமான துரைமுருகன் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.
வேலூர் மாநகரின் துணை மேயரும் காட்பாடி தெற்கு பகுதி செயலாளருமான M.சுனில் குமார் காட்பாடி ஒன்றியக் குழு தலைவர். V.வேல்முருகன், பேரூராட்சி தலைவர் சாமுண்டீஸ்வரி ரவி துணை தலைவர். S.சரவணன் நகர துணை செயலாளர். சதீஷ்குமார் 5 வது வார்டு மாமன்ற உறுப்பினர். உமா மகேஸ்வரி திமுக ஒன்றிய கழக செயலாளர்கள். கே.கருணாகரன், தணிகாசலம், இரவி ஆகியோர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊரக உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் தலை மை செயற்குழு மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள், கிளை கழக செய லாளர்கள், இளைஞர் அணிகளின் அமை ப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ்.



கருத்துகள்
கருத்துரையிடுக