ராணிப்பேட்டையில் இபிஎஸ் அவர்கள் உரையாற்றும் இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர். கே. சி. வீரமணி!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ராணிப்பேட்டை ஆற்காடு ஆகிய இரு தொகுதிகளில் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் "மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் " சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் எம் சுகுமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இபிஎஸ் அவர்கள் உரையாற்றும் இடத்தை முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி நேரில் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சீனிவாசன் முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, நகர செயலாளர் கேபி சந்தோசம், டபிள்யூ ஜி மோகன், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக