பண்ருட்டி காவல்துறை சார்பில் பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர். பரமேஸ்வர பத்மநாபன் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் உதவி ஆய்வாளர். முரளி அவர்கள் பண்ருட்டி - கும்பகோணம் Link Road பகுதியில் சரக்கு வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்களை இறக்கி விடப்பட்டு அவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இது போன்ற ஆபத்தான முறையில் பயணம் செய்யக் கூடாது என எச்சரித்தும் அவர்களை பேருந்துகளில் பயணம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் வாகன ஓட்டுனருக்கு அபராதம் விதித்தும் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக